பக்கம்:தரும தீபிகை 4.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1520 த ரு ம தீ பி. கை மறந்தும்மாதர்முகிழ்முலையில் தழுவலாகாதுஎனவகுத்தார் அறங்கூர்,தரும அால் வகுத்த மனுவைமுதலாம் அறிவினரே. (கூர்மபுராணம்) மனேவியோடு மருவக் கூடாக தினங்களை இது விளக்கியுள்ளது. இவ்வாறு விதிகியமங்களைக் கழுவி ஒழுகிவருபவர் விழுமிய ரோப் மேலான நிலைகளை அடைகின்றனர். கட்டுப்பாடும், வரம்பும், ஒழுங்கும் மனிதனை மாண்புறுத்தி வருகின்றன. உரிமையான ஒழுங்குகள் குறைக்க பொழுது மனிதன் சிறுமை அடைய நேர்கின்ருன். நேர வே அங்கே அல்லல்கள் பெருகி அழிதுயர்கள் சேர்கின்றன. நல்ல அறிவு வாய்ந்திருக் அம் நெறிமுறைகளில் நில்லாமல் பொறி வெறியகுய்ப் பொல் லாத வழிகளில் செல்லின் இழிமிருகமாப் மனிதன் எள்ளப் படுகின்றன். கேமங்கள் குன்றிய அளவில் சேமங்கள் குன்றின. வெங்காமம் உன்னே வெறிபுலேயன் ஆக்கும். என்றது எல்லைமீறிய காமத்தின் இழிநிலையும் அழிதுயரும் தெரிய வந்தது. உரியமனைவியிடம் முறைமையோடு மருவிவரு வது இனியகாதலாப் இசை பெற்றுள்ளது; இம்முறை கடந்து அயலே ஒடின் அது கொடிய கர்மமாய் வசையுற்று நெடிய துயரங்களை விளைத்து விடுகின்றது. கன்னுடைய சொக்க மனேவி விட்டிலிருந்தும் பிறனுடைய மனைவியை ஒருவன் விழைந்து செல்வது எவ்வளவு கிங்கை எத் அதுணே மடமை. உப்த்துணர வேண்டும். கன் மனையான ا ہابیئےL’ லான் இச்சித்து நோக்கில்ை எங்க மனிதனும் உள்ளம் கொதிக் கின்ருன்; இக்க அனுபவம் இருந்தும் ஒரு சிறிதும் உணராமல் ஊனமாய் ஈனம்புரியப் போவது இழிபழிக்கும் அழிதுயர்க்கும் போன படியாம். கேடு தெரியாமல் கூடி அழிகின்ருர். கல்ல ஒழுக்கங்களைப் பழகி நெறிமுறையே வாழாமல் பொறிவெறிகளில் புலையாடியுழல்வது இந்நாளில் யாண்டும் நிலை யாப் நீண்டு நிலவுகின்றது. காமக்களிப்பிலேயே கண்னும் கருத்துமாயி ஒடி மனித இனம் மண்ணுய் மடிந்து வருகிறது. பேசும் படக்காட்சி பேய்க்காட்சி யாய்ப்பெருகி சேமடக் காட்சிகளாய் நீண்டுளவே-நாசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/367&oldid=1326533" இலிருந்து மீள்விக்கப்பட்டது