பக்கம்:தரும தீபிகை 4.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. கா ம ம் 1537 650. உள்ளத்தே காமம் ஒழியின் உயரின்ப வெள்ளத்தே மேவி விளங்குவாய்-உள்ள த்துள் காமப் புலைகள் கவிந்திருக்கும் அவ்வளவும் ஈமப் புகைகள் எழும். (ιδ) இ-ள். அகத்தே காம இச்சை ஒழியின் அளவிடலாய மகிமை களோடு உயர் பேரின் பங்களை 母 அடைந்து விளங்குவாய், உள் ளத்தில் காமப் புலேகள் கதுவி யிருந்தால் பிறவித் துன்பங்கள் பெருகி யாண்டும் ஈமப் புகைகளைக் காண்பாப் என்க. பிறந்து வளர்ந்து மு தி ர் ங் து இறந்து போவதே வேர்க ளுடைய இயல்பாயுள்ளது. தோன்றி மறைக்து போகின்ற இந்த மாய வாழ்வு ஓயாமல் சுழன்று வருகிறது. பிறவியில் துயரங்களே பெருகி யிருக்கின்றன. கருவாய்த் தோன்றியதி லிருந்து பின்பு உருவொழிந்து போகும் வரையும் அல்லல்களே அடர்ந்து கிற்றலால் பிறவி பெருந் தொல்லை என நேர்ந்தது. எவ்வழியும் பாண்டும் துன்பங்களே தொடர்ந் துள்ளமையால் பிறவி சிங்கி உய்வதே பேரின்பமாயது. பிறப்புக்கு வித்து ஆசை ஆதலால் அந்த அவா அறவே அழிந்தபோதுதான் பிறவி ஒழிந்துபோகிறது. பிறவிக்கு மூலகாரணமான அது இருக்கும் வரையும் பிறப்பும் இறப்பும் விடாமல் பெருகி வருகின்றன. அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் கவாஅப் பிறப்பினும் வித்து. (குறள், 361) ஆசையே பிறவிக்கு வித்து; அதனே ஒழித்த உப்ய வேண்டும் எனத் தேவர் இங்ங்னம் உணர்த்தி யிருக்கிரு.ர். பிறவியை வேர,றக்க வேண்டின் அவாவைக் அாாறுக்க வேண்டும் அவா. ஒழிந்தவர் அதிசய மகான்கள் - ஆகின்ருர், சே ஆசை நீங்கினவர் ஈசனை எதிரே காண்கின்ருர், "கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம் காமம் வெகுளி கழிபெரும் பொய்எனும் அாய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன் மையிருள் நிறத்து மதனுடை அடுசினத்து ஐவகைக கடாவும யாப்பவிழ்த் தகற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/384&oldid=1326550" இலிருந்து மீள்விக்கப்பட்டது