பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப()ேல வேசம் 10] டில்லி பிளைட் வரைக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருப்பார். நீங்கள் அவரைப் போய்ப் பார்க்கவும்.” அருணாசலம், துடித்துப் போனார். "டேய். பலவேசம்..” "அவரு போய் ஒரு மணி நேரம் ஆகுதே வார். ஆபீஸ் கார்ல 'டேய் மடையா. வெள்ளைச்சாமி! உனக்கு மூளை இருக்காடா..? அரை மணிநேரத்துக்கு முன்னால வந்த டெலக்ஸை இப்போ தாறே.” அந்த அறைக்குகைக்குள்,அருணாசலம்,குறுக்கும்.நெடுக்குமா கத்திக் கொண்டே கற்றினார். இனிமேல், மீனம்பாக்கம் போகமுடியாது. இந்நேரம் எம்.டி. செக்யூரிட்டி ஜோனுக்குள் போயிருப்பார். இந்த பலவேசப் பயல் பேருக்கு ஏத்தபடியே நடத்துக்கிடுறானே. இவனை விடப்படாது. இரண்டு மணி நேர கொந்தளிப்பிற்கு பிறகு, பலவேசம் அறைக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு அருணாசலம், எழுந்தார். புஷ் டோர்களை வேகமாய்த் தட்டிவிட்டபடியே, பலவேசம் அறைக்குள் பாய்ந்தார். "எங்கே போயிட்டு வர்றிங்க..?” "தலைவரே. உட்காருங்க. மருந்து சாப்பிட்டீங்களா..?” "எங்கேய்யா போனே..?” "அதோ அங்கதான். காப்பி சாப்பிடுவோமா..? "ஏர்போட்டுக்கு எம்.டி. வந்ததை என்கிட்டே, ஏய்யா சொல்லலை.”