பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O க. சமுத்திரம் போய்விடலாமா?. எப்படி முடியும். அவளுக்கும் தங்கைகள் இருக்கிறார்கள், தனக்கும் தங்கைகள் இருக்கிறார்கள். இவன் ஒடி, அவர்களுக்கு வரும் கல்யாணமும் ஒடிப்போய் விடக் கூடாதே. அதற்காக. எப்படிக் குடும்பம் நடத்த முடியும்? கட்டிய தாலியைக் கழற்ற, அவன் தயார். ஊர் உலகம் ஒப்புமா. குடும்பம் நடத்தித்தான் ஆக வேண்டும். ஆனால். என்ன ஆனால்? வாழ்க்கையே ஆனால்' ஆகிவிட்டதே. காலநேரம் தெரியாமல் அவன், கால்கள், அவனைப் பல்லக்குச் சுமப்பது போல சுமந்த போது செல்லப்பாண்டி. செல்லப்பாண்டி என்ற குரல் கேடடுத் திரும்பிப் பார்த்தான். தன் உறவினர்களும், பெண்ணின் உறவினர்களும் படையெடுத்து வருவது போல் வந்தார்கள். 'செல்லப்பாண்டி.செல்லப்பாண்டி என்ற குரல், கரையில் மோதி, குளத்தில் எதிரொலித்தது. செல்லப்பாண்டி. ஒருவேளை இந்தப் பெயரைக் கூட கர்நாடகம் என்று ஒதுக்கியிருப்பாள். இதைக்கூட செல்வா என்று மாற்றிக் கொள்ளலாம். ஆனால் உடம்பு நிறத்தை மாற்ற முடியுமா? செல்லப்பாண்டி, அவர்களைப் பார்த்து, திரும்பி நடந்தான். அவன் வேதனையைப் பகிர்ந்து கொள்பவர்கள் போல், அத்தனை பேரும், அவனை மெளனமாகப் பார்த்தார்கள். தந்தை, அவன் கையை எடுத்துத் தன் கைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டார். மெதுவாக 'நான் ஒருவன் ஒனக்காக இருக்கிறதை மறந்துடாதடா...' என்று தழுதழுத்த குரலில் சொன்னபோது, அவரது கை, தானாக ஆடி, தன் கையையும் ஆட்டுவிப்பதைப் புரிந்து கொண்டான். எப்படியோ, விவகாரம் எல்லோருக்கும் தெரிந்து விட்டதைத் தெரிந்து கொண்டான். வீட்டுக்குள் அவன் நுழைந்தபோது, உள் அறையில் ஒரு கட்டிலில், மனவிை குப்புறப் படுத்துக் கிடந்தாள். செல்லப்பாண்டி,