பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயமரியாதை இல்லாத சுதந்திரம் அந்தப் பிள்ளையார் கோவிலுக்கும் - அதற்கு எதிரே இருந்த பூக்கடைகளுக்கும், காய்கறிக் கடைகளுக்கம் இடையே ஏதோ ஒரு பொருத்தம் இருக்க வேண்டும். மாலை பிறந்த நேரம். அந்தக் கோவிலில் அர்ச்சகர் பூக்களை வைத்துக் கொண்டு 'ஓம் வக்ர துண்டாயா என்றபோது, கீரைக்காரி மாரியம்மாள், தண்டங்கீரை தண்டு ஒன்றை ஒடித்துக் கொண்டிருந்தாள். அவர் ஒம் விகடாயநம என்று சொல்லி, ஒரு பூவைப் போட்டபோது, பூக்காரர் ஒருவர், கம்மா கும்'முன்னு ஆடினார். இன்னும் சொல்லப்போனால், அவர் ஆடவில்லை. அவர் ரத்த ஓட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக நாடி நரம்பு எங்கும் ஒடிக் கொண்டிருந்த தண்ணி அப்படி ஆட்டி விட்டது. மாலை மயங்கி மரங்களும், மக்களும், கடைக்கண்ணிகளும் ஒரே மாதிரி ஆகாமல், பிள்ளையார் கோவில் விளக்கு லேசாய் பிரித்து வைத்தது. மத்தியான வெயிலுக்காக சற்று தொலைவிலுள்ள துங்குமூஞ்சி மரித்தருகே நிறுத்தி வைத்திருந்த பழ வண்டியை தள்ளிக் கொண்டு சின்னானும், அவன் மனைவி பார்வதியும், பஸ் நிலையத்திற்கு அருகே வந்தபோது, 'தோ... அந்த சோமாறி நெஞ்சை பார்த்து நீட்டா உருட்டுப்பா... தத்தேரி கயிதே... இந்தண்ட வான்னா காதுல ஏறல...' என்றாள் பூக்காரி தாயம்மாள். வாய் பேசினாலும், கைகள் அவை பாட்டுக்கு சாமந்திப்பூவைக் கட்டிக் கொண்டிருந்தன. உடனே சின்னான் மனைவி, "நானுந்தான் உன்கு எத்தனைவாட்டி சொல்றது?