பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயமரியாதை இல்லாத சுதந்திரம் 13 ஆறுவயக பையனை அம்மணமா விட்டா எப்பிடி. டேய் சோமாறி நெஜார் பூடேண்டா...' என்று சொன்னபடியே வாழைப் பழங்களை வண்டியில் பரப்பினாள். நிஜார் போடாத அந்தச் சிறுவனின் உடம்பைப் பார்த்ததும் பழக்கார பார்வதி எதேச்சையாக தன் கிழிந்த ஜாக்கெட்டை நைந்த புடவையால் மூடிக் கொண்டாள். நிஜார் போடாத அல்லது போட விரும்பாத அந்தச் சின்னப்பையன், "நம்ம கிட்ட ராங் காட்னே கத்தியாவே கீச்சிப்புடுவேன்.” என்று சொல்லிவிட்டு, பிறகு எல்லா மெட்ராஸ் ரவுடிகளையும்போல ஒடினான். சாலையின் பிளாட்பாரத்துக்குக் கீழே பள்ளமான ஓர் இடத்தில் செருப்புக்களை தைத்துக் கொண்டிருந்த சீனன் (அதாவது சீனிவாசன் என்ற பெயரின் கருக்கம்) போதையில் ஆடிக் கொண்டிருந்த தாயம்மாவின் ஆம்புடையானைப் பார்த்தான். தாயம்மா, கணவனை கடிந்து கொண்டிருந்தாள். 'இனிமே காட்டி... இந்தப் பிள்ளையாரப்பன்தான் ஒன்னைக் கேட்கணும். நான் பூவிலே சம்பாதிக்கிறத, நீ தண்ணியிலே விடுற." 'தண்ணிக்காரர் பதிலடி கொடுத்தார். 'இன்னாமே... படாப் பேஜார் பண்றே... ஒனிகாவ காலங்காத்தாலே மொந்தை மொந்தையா பூ வாங்கிக்கினு வரணும். நீ ஆருகிட்டேயாவது 'பைட்டுக்குப் போனால், நான் உதைக்கப்போணும். கம்மா ஒரு கிளாஸ்பூட்டா இன்னாமே.ஏய், வுன்னை." மனைவியைப் பார்த்து நோக்கி நடந்த பூக்காரரை, சின்னான் தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய், ஒரு துங்குமூஞ்சி மரத்துக்குக் கீழே புரள வைத்தான். தாயம்மாவிற்கு அருகே, பிளாட்பார கவருக்கும் - ஒரு மரத்திற்கும் இடையே