பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. க. சமுத்திரம் வைக்கப்பட்டிருந்த சதுரப்பெட்டியில் ஓணான் இலைகளை, தவளை மாதிரி மடித்துக்கட்டி, அதற்குமேல் துலுக்கச் சாமந்தி, சம்பங்கி, செவ்வரளி முதலிய பூக்களை அடுக்கடுக்காக - அழகாக கட்டிக்கொண்டிருந்த ராமன், கீழே குனிந்து அதட்டினான். "உங்க பொழப்ப பாருங்கம்மே. இவரு என்ன புச்சாவா குடிக்காரு.” கீழே சம்மணம் போட்டபடி பூக்கட்டிக் கொண்டிருந்த சாந்தியும், ஒரு காலை தூக்கிவைத்து, அதிலே முகம் பதித்து, ஆள் உயர மாலை ஒன்றிற்கு ரோஜாப் பூக்களால் அச்சாரம் போட்டுக் கொண்டிருந்த துலுக்கானமும், தங்கள் புருஷனை அண்ணாந்து பார்த்தார்கள். ஒருத்திக்கு இப்போதுதான் அபார்ஷன் ஆனது. இன்னொருத்திக்கு ஏழு மாதம். அவர்களின் பார்வையைப் புரிந்து கொண்ட அந்த இரண்டு பெண்டாட்டிக்கார ராமன், "மன்ஷன்னா குடிக்கத்தான் செய்வான்' என்று தன்பாட்டுக்குச் சொல்லிக்கொண்டு, எதிரே நின்ற வாடிக்கையாளரைப் பார்த்தான். “எத்தனை முயம் சாமி?” "முழம் எவ்வளவு? "சாமந்தி அம்பது பைசா. சம்பங்கி அறுபது பைசா.” "ருேத்து முப்பது பைசாதானே.” "இன்னிக்கு சிவராத்திரி சாமி” "அதுக்காக இப்படி அநியாய விலையா?” புரண்டுகொண்டிருந்த புறநானூற்று வீரனான புருஷனை பார்த்தபடியே, தாயம்மா இடைமறித்தாள்: "எங்க பொயப்பு அப்படி சாமி! மழை வந்திட்டா அம்புட்டும் அழுகிடும். அப்போ எங்க போய் முட்டிக்கது.?” வாடிக்கையாளர் தயங்கிக் கொண்டிருந்தபோது, "இங்கே வா சாமி! எங்கிட்டே ரோஜாப்பூக் கீது. தாமரை கீது...