உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிமுகம்

உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா
ருள்ளத்து ளெல்லா முளனென்ற — வள்ளுவரின்
ஒற்றைக் குறள்பாவை யுண்மையெனக் கொண்டொகப்
பெற்றதாற் பெற்றதிப் பேறு.

எனைவிட்டுச் செல்லஇசைந் தேங்கு மிளமை
தனவிட்டுப் புல்லித் தறுக்கண் — புனைவொட்டும்!
வாலிபன்நா னென்ன அனிதையர்தம் கண்துன்னும்
கால்மிது, வென்று கணித்து.

குரலொன்றி நின்றும் குறியொன்றி நட்டும்
விலொன்றிற் றென்றூர் விளம்ப — நிரலொன்றி
பாரிலிருந் துய்யப் பரிந்து.

நட்டார் பிரிந்து நகர்ப்புரம் நண்ணிடினும்
மட்டார்மா, தென்னை, கதலிபலா — கட்டார்ந்த
வேலிசூழ்ந் தெங்களது விட்டருகில் தோட்டமதில்
காலிகன் றுண்டு கலித்து.

உழைத்திரைந்து வாழும் குடிகளுட னென்றித்
தழைத்திசைடந்து வாழும் தமிழன் — அழைத்தாலும்
வேறுதொழில் செய்ய விரும்பா னெனவிதந்து
கூறுவதுண் டூரில் பலர்.

தந்தை தவறியதும் தாயே தலைவியெனச்
சிந்தை சிதருது செப்பமுடன் — நிந்தை
நிலழாது சார்ந்து நிறைவுறையச் செய்தூ
ரிகலாது சேர்த்தா ரிசை!

உழவுத் தொழிலே வுரியதென வுன்னி
ஒழிவகல நாழு முழைத்தாங் — கிழிவகலப்
பண்ணைப் பயிர்ப்பண்மாய்ப் பண்ணியதைப் பார்த்தெடுத்
தெண்ணியின் புறுவரென் தாய்!

வாழ்வாங்கு வையத்துள் வாழ்ந்தார் வரலாறு
தாழ்வாங்கு வைத்தால் தகர்த்திடுவர் — வீழ்வாங்கு
நேர்வே நேராது; நீணத்தில் வேரூன்றிப்
பாரெங்கும் பற்றும், படர்ந்து.