பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

அது மகிழ்ச்சிக் குரல் கொடுத்தது. அதை அவிழ்த்து விட்டதும் நேரே வீட்டுக்குள் பாய்ந்தது. -

நான் மிகவும் தலைக் குனிவுடன் காணப்பட்டிருக்க வேண்டும். அதனுல்தான், தாத்தா காக்ஸ் ஸ்டோரில் தங்கி, இனிய பான மும் கற்கண்டும் எனக்கு வாங்கித் தந்தார். நாங்கள் வீடு சேர்ந்ததும், அவர் சொன்னர் : நீ அதிகம் நிலைகுலையாதே. சிலவற்றைப் பற்றி-சில நாய்கள், சில வெள்ளாடுகள், சில ஆட்கள் பற்றி-அக்கறை எடுத்துக் கொள்வதால் பலன் எதுவும் ஏற்படாது. நாம் சாப்பாடு கொடுக்கலாம் : சாந்தப்படுத்தலாம் : அவை பற்றிக் கவலைப்படலாம் ; நயமாகப் பேசலாம் ; அவற். றுக்குப் பயிற்சி அளிக்கலாம். எனினும், அந்தப் பாழும் ஆடு மாதிரியே, அவை முரட்டுப் பிடிவாதத்துடனேயே இருக்கும். சிறிது காலத்துக்குப் பிறகு, பயன் எதுவுமில்லை என்று கண்டதும், அவற்றை விட்டு விடுவது தான் சரி. இதில் முக்கிய விஷயம்மிகவும் சீக்கிரமாகவும் இல்லாமல், மிகவும் தாமதம் இன்றியும்எப்பொழுது விட்டொழிப்பது என்பதை அறிவதுதான். நான் ஒன்றும் பேசவில்லே. -

இன்னும் நீ ஒரு குதிரைக்கு ஆசைப்படுகிருயா ?’ என்று தாத்தா மிக மெதுவாய் கேட்டார். -

இந்த வருஷம் வேண்டாம். அந்தப் பாழும் வெள்ளாட்டி ஞல் நான் மிகவும் களைத்துப் போனேன். இவ் வருஷம் மீன் பிடிப்பிலேயே என் கவனத்தைச் செலுத்தப் போகிறேன். குறைந்த பட்சம், ஒரு சிறு படகையாவது நான் நிர்வகிக்க முடியுமே ‘ என்றேன்.

  • இப்ப நீ அறிவு இருப்பதாகக் காட்டிக் கொள்கிறாய். எவனும் எல்லாக் காரியங்களையும் நன்முகச் செய்ய இயலாது. அநேகர் அகலக் கால் பரப்புவார்கள். இதை முயல்வது, அதில் கொஞ்சம் செய்வது, எடுத்த காரியத்தை முடிக்காமல் விடுவது, தோல்வி கண்டதும் எப்பொழுதும் வேறு புதிய விஷயங்களைத் தேடி அலைவது என்றிருப்பார்கள். கூரிய அறிவுடையவன், தான் நன்றாகச் செய்யக்கூடிய சில காரியங்கள் இருக்கும்பொழுது, அவற்றை அறிந்து கொள்வான். வேறு எதிலாவது தோல்வி காணும்போது, அவற்றைச் செய்யும் சாமர்த்தியமும் அவனிடம் இருக்கும். இது அவனது அறிவாற்றலை ஒன்று கூட்டவும், ஏமாற்ற உணர்வை அமைதிப்படுத்தவும் துணைபுரிகிறது. பிறகு அவன் மீண்டும் புதிய விஷயத்தில் ஆர்வம் காட்டத் தகுதி பெற். வான். பெருவாய் மீன்கள் இன்று இரவில் தூண்டிலேக் கவ்வக் கூடும்-நீ அவற்றிடம் சிரத்தை காட்டினுல்தான் ” என்று அவர் சொன்னர். - - பெரு வாயன்கள் கவ்வின_ எனது புண்பட்ட உணர்வுகளும், ஏமாற்றங்களும் வெகு விரைவிலேயே அமர்ந்து விட்டன. அத்ற்கு மேல் நான் அவ்வெள்ளாட்டின் மீது வெறி கொண்டிருக்கவில்லை.