பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடைத்தெழு வெள்ளம் 85

என்று அவன் எண்ணவில்லை. போதுமான அளவுக் குத் தேடவேண்டும் என்றுதான் எண்ணியிருந்தான். இப்போதோ உடனடியாக வேண்டிய அளவுக்கு” ஈட்டினல் போதும் என்று நினைந்தான். விரைவாக ஈட்டி அதைக் கைக்கொண்டு திரும்பவேண்டும் என்ற ஆவல் உண்டாகிவிட்டது.

அப்படியே விரைவில் அவன் ஓரளவு பொருளே ஈட்டினன். அதனை எடுத்துக்கொண்டு தன் ஊர் வந்தடைந்தான்.

அவன் வந்ததைக் கண்ட தோழி வியப்பில் ஆழ்ந் தாள். அவன் இன்னும் சில காலம் தங்கிப் பொருள் சேமித்துக்கொண்டு வரக்கூடும் என்று அவள் எண்ணி யிருந்தாள். அவனே, போனேன், வந்தேன் என்று விரைவில் வந்துவிட்டான். அதற்குக் காரணம் என்ன? -

'இவள்தான் போவதற்கு முன்பே வருத்தமடை யத் தொடங்கிவிட்டாளே! அப்போதே இவள் கண் ணில் நீரூற்றுத் தோன்றிவிட்டது. அதை இவர் பார்க்காமலா இருந்திருப்பார்? அதன் பயனுகவே, சட்டுப் புட்டென்று தம் வேலையை முடித்துக்கொண்டு வந்துவிட்டார்.’ . . . . . .

இப்படித் தோழி எண்ணினுள்.

ஊரில் உள்ளவர்கள் பேசிக் கொள்வதை அவள் கேட்டிருக்கிருள், பல மலேகளையும் காடுகளேயும்