பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தாமரைப் பொய்கை

சிறிய கடுகு என்றே நினைக்கத் தோன்றும். பூமியே அவ்வளவு சிறியதாகத் தோன்றமானுல் தனி மனித ராகிய நாம் எவ்வளவு அனுப் பிரமாணமாக ஆகி. விடுவோம்!

கம்முடைய முன்னேர்கள் பிரபஞ்சம் மிக மிக விரிந்தது என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள். நம் கண்ணுக்குத் தெரியாத அண்டங்கள் பல உண்டு என்று நூல்கள் சொல்கின்றன. மாணிக்கவாசகர் நூற்ருெரு கோடிக்கு மேல் உள்ளன என்று சொல்கிருர்.

  • அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி; ஒற்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் நூற்ருெரு கோடியின் மேற்பட விரிந்தன’’ என்பது அவர் திருவாக்கு.

புராணங்களில் பதின்ைகு உலகங்கள் என்று ஒரு கணக்குச் சொல்லி யிருக்கிருர்கள். அவற்றையும் மூன்று வகைகளாக வகுத்தார்கள். மேல், கீழ், நடு என்று மூன்று அடுக்குகளாக உலகங்கள் இருக்கின்றன. என்று கூறினர். அந்தர் மத்திய பாதலம் என்று வட மொழியிலே சொல்வார்கள்.

~. 'முப்புண்ர் அடுக்கிய முறை முதற் கட்டு” என்று புறநானூற்றில் இந்த உலக வரிசையை ஒரு புலவர் எடுத்துச் சொல்கிரு.ர். இவற்றை மூவகை உலகம், மூவுலகம் என்று பழம் புலவர்கள் வழங்கு, (6).JPTITLEST.

நாம் காணும் உலகமும் காணுத அண்டங்களும் மூவகை உலகினுள் அடங்கும். இந்த மூவகை உலகங் களிலும் உயிர்கள் வாழ்கின்றன. தோன்றி மறை,