பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அறிமுகம்

முருகன் :-தம்பி! வா. எங்கே உன்னைச் சில நாட்களாகக் காணவில்லையே? எங்கே சென்றிருந்தாய்?

இராமன் :-ஆம் ஐயா. சென்னைக்குச் சென்றிருந்தேன். அங்கே பல கண்காட்சிகளைக் கண்டேன். சில பத்திரிகைகள் வாங்கிப் படித்தேன். சில நூல்களும் வாங்கினேன்.

முரு :-அப்படியா! நல்லது. இதோ கையில் வைத்திருப்பதும் நீ அங்கே வாங்கிய புத்தகம்தானா ?