பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

இரா:-ஆமாம். . இது 'அண்ட கோளம்' என்ற புத்தகம்.

முரு :-ஓ! அதில் என்ன எழுதி இருக்கிறது? நீ முழுதும் படித்து விட்டாயா?

இரா :-இல்லை பெரும்பாலும் படித்து விட்டேன். இதில் இந்த உலகம் உண்டானது பற்றியும் இதைச் சுற்றி இருக்கும் பொருள்கள் பற்றியும் எழுதி இருக்கிறார்கள்.

முரு:-அப்படியா? இது நல்ல நூலாகத்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

இரா:-சந்தேக மென்ன? சென்ற ஆண்டு இந்திய அரசாங்கத்தார் இந்த நூலுக்கு ஆயிர ருபாய் பரிசு அளித்திருக்கிறார்கள். இதில் ஆசிரியர் மிக எளிமையாக எத்தனையோ விளங்காத பொருள்களையெல்லாம் விளக்கி இருக்கிறார்.