பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7

முரு:-அரசாங்கத்தார் நல்ல வேலைதான் செய்கிறார்கள்.

இரா:-ஆமாம். நம் போன்ற சாதாரணக் கிராம மக்களும் நன்றாகப் படிக்காதவர்களும் கூட எல்லாப் பொருள் களையும் எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி விளக்கி எழுதும் நல்ல ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பரிசு அளிக்கிறார்கள்.

முரு:-நல்லதுதான். இப்படிச் செய்வதால் எல்லோருக்கும் பயன் உண்டு. ஆமாம் இது போன்று எத்தனை நூல்கள் நீ வாங்கி வந்திருக்கிறாய் ?

இரா :-நான் பத்துக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கியிருக்கிறேன். என் போன்றவர்கள் இப்படிப்பட்ட நூல்களைப் படித்துத்தானே அறிந்துகொள்ள முடியும் !