பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8

முரு-ஆமாம்; தம்பி! உண்மைதான். அவற்றையெல்லாம் படித்து விட்டாயா! அவற்றில் என்னென்ன எழுதி இருக்கிறார்கள்?

இரா-இன்னும் எல்லாவற்றையும் படிக்கவில்லை. ஒரு சிலவற்றைப் படித்தேன். எல்லாவற்றிலும் நான் படித்தமட்டில் பல உண்மைகளை அறிந்து கொண்டேன். அணுவின் சக்தி பற்றியும், தாவரங்கள் பற்றியும், நம் நாட்டுச் சமுதாய திட்டங்கள் பற்றியும் பல வகைகளில் விளக்கி எழுதி இருக்கிறார்கள். நாளைக்கு வேண்டுமானால் உங்களுக்கு எல்லா நூல்களையும் கொண்டு வந்து தருகிறேன். -

முரு:-வேண்டாம். இப்போது வேண்டாம். நீ படித்த பிறகே கொண்டு வந்து கொடு. ஆமாம் படித்தவற்றில் பல கண் முன் காணும் பொருள்களைப் பற்றித்தானே எழுதி இருக்கிருர்கள்!