பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9

இரா :--ஏன்? அணுவைப் பற்றிய நூல்?

முரு :-ஒத்துக் கொள்ளுகிறேன். என்றாலும் மனிதனுக்கு உள்ளேயே நிகழும் பலவற்றைப்பற்றி இன்று கண்டு எழுதி இருக்கிறார்களே! தெரியாதா?

இரா :-அது என்ன ஐயா? நீங்கள் எதைச் சொல்லுகிறீர்கள்?

முரு :-சொல்லுகிறேன் கேள். ஆமாம். தாயார் வயிற்றுக்குள் தானே நாமெல்லாம் பத்து மாதம் இருந்து பிறந்தோம்?

இரா:-ஆமாம். அதற்கென்ன?

முரு :-அவசரப்படாதே. சொல்லுகிறேன். அந்தப் பத்து மாதங்களில் தாய் வயிற்றில் கரு எப்படி எப்படி வளர்கிறது என்று சொல்ல முடியுமா உன்னால்?