பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10

இரா:-என்ன ஐயா? வேடிக்கை செய்கிறீர்களா? வயிற்றுக்குள் இருப்பதை எப்படி ஐயா காண்பது ? நோய் வந்தால் கண்டு பிடிக்க ஏதோ புதுக் கருவி வந்திருக்கிறதாம். ஆனல் அது கூட வளரும் கருவைக் காட்டுமா என்ன?

முரு:-ஆமாம் தம்பி! ஆமாம். கரு வளர்வதைக் காட்ட முடியும். அதை பற்றி எல்லாம் கண்டுபிடித்து விட் டார்கள். அது எப்படி எப்படி வளர்கிறது என்று எழுதி இருக்கிறார்கள்.

இரா:-அப்படியா? நான் படிக்கவில்லையே.

முரு:-நீ எப்படிப் படிக்க முடியும்? அதையெல்லாம் இன்னும் தமிழில் யாரும் நல்ல வகையில் எளிமையாக விளக்கி எழுதவில்லை. ஆங்கிலத்தில் எத்தனையோ புத்தகங்கள் வெளி வந்துள்ளன.