பக்கம்:தாயுமானவர்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. புனித மெனும் அத்துவிதம் இறைவனுக்கு உலகத்தோடுள்ள தொடர்பை விளக்கு வதற்கு அடிகளார் அத்துவிதம் என்ற சொல்லைப் பயன்படுத் துகின்றார். அத்துவிதமாவது, இரண்டல்லாமை (அதாவது பிரிவின்மை) என்பது அவர்தரும் விளக்கம். 'அத்துவிதம்' என்ற சொல்லே அந்நியநாத்தியை (பிரிப்பின்மையை) உணர்த்துமாயிற்று' என்று உரைத்தருளினமையால் இது தெளியப்படும். 'பிரிவின்மை’ என்று கூறுவதனாலேயே 'பொருள் இரண்டு’ என்பதும், இரண்டாயினும் வேறுவே றாய் நில்லாது ஒன்றியே நிற்கும்’ என்பதும் பெறப்படும். அத்துவிதத் தொடர்பில் அபேதம், பேதம், பேதாபேதம் என்ற மூன்று தன்மைகளும் ஒருங்கே காணப் பெறுகின்றன. இம் மூன்றற்கும் பொதுவாய் நிற்றலையே வேதம் அத்விதீயம்' (அத்துவிதம்) என்று கூறுகின்றது. இதன் உண்மைப் பொருள் சித்தாந்தத்தில்தான் தெளிவாகின்றது. இறைவன் உயிர்களோடு கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாயும் நின்று உலகத்தைச் செயற்படுத்துவான் என்பது சித்தாந்தம் தரும் விளக்கம். இந்த விளக்கத்தை மேலும் விரித்துக்காட்டித் தெளிவு பெறுவோம். இறைவனும் உலகமும் ஒன்றி நிற்கும் கலப் பினை நோக்குங்கால் இரண்டும் ஒன்றே எனக் கூறுமாறு அபேதமாய் நிற்கின்றான் இறைவன். பொருள் தன்மையை நோக்குங்கால், 'இறைவன் தன்மை வேறு உலகின்.தன்மை வேறு' எனக் காணப் பெறுவதால் இறைவன் பேதமாய் நிற்பது தெரிகின்றது. உலகத்தை இறைவன் தொழிற்படுத்த லேயன்றி, அதன் பொருட்டுத் தானும் உடன் தொழிற்பட்டு நின்றும், உலகம்போலத் தான் விகாரம் அடையாது நிற்றலை 1. சி.ஞா.போ.2ஆம் சூத்திரம் மலதிகாரணம் - வார்த்திகம் (7b) - (சிற்றுரை) காண்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/200&oldid=892198" இலிருந்து மீள்விக்கப்பட்டது