பக்கம்:தாயுமானவர்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:E ஆசாரியனின் அருமை & 241 & கள் கூடி அஃது உருவாகியுள்ளது. அது உருவெடுக்க அமைந்த பொருள்களாகி, இரத்தம், தசை, எலும்பு, கொழுப்பு முதலிய பொருள்கள் உருமாறி அமையும் தன்மை யுடையவை; எளிதில் அழிந்துபட்டுப் போகக் கூடியவை. இத்தகைய நிலையற்ற பொருள்களைக் கொண்டு அமைந்த உடலைப் பொய்யானது என்று சொல்லுதலே முறை. இத னைத் தெரிந்து தெளிந்திருந்தும் உடலைப் பொய்யானது என்று நாம் வழங்காமல் மெய்யானது என்றே கூறி வருகின் றோம். சிலசமயம் உடலை மறந்திருக்கின்ற நிலையை மெய்ம றந்த நிலை என்கின்றோம். ஆழ்ந்து நோக்கின் இது மெய் யல்ல என்பது புலனாகும். அழிந்து போகின்றவை அனைத் தும் பாழானவை என்று பகரப் பெறுகின்றன. இக்கருத்தை அடிகள் மெய் என்று பேசும் பாழ்ப் பொய்யுடல் என்று இயம்புகின்றார். இத்தகைய உடலைப் பேணி வளர்ப்பதில் மனிதன் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றான். இல்லம் அமைத்துக் கொள்ளல், ஆடைகளை அணிந்து கொள்ளல், பூமியில் விளையும் தானியங்களை உணவாக்க முயலுதல், உணவை விதவிதமாகச் சமைத்தல் - என்பன போன்ற எத்தனை செயல்கள்! உணவுக்கு 'அமுது என்ற ஒரு பெயரும் உண்டு. இறப்புக்கு இடம் தராத பொருள் அமிர்தம் - அமுது, உணவின் மூலம் மனிதன் மரணத்தை ஒத்திப் போட்டுக் கொண்டிருக்கின்றான். அதை உண்டு செரிப்பதால் உடல் வளர்கிறது; பெலக்கவும் செய்கிறது. உணவில் வைத்த ஆசை உடல் வாழ்க்கையில் வைத்த ஆசையின் விளைவு ஆகும். உணவைப் பெருமகிழ்ச்சியுடன் ஏற்கின்றான். உடல் வாழ்க்கையில் வைத்த ஆசையே அம்மகிழ்ச்சிக்குக் காரணமா கின்றது. இக்கோட்பாட்டை அடிகள் உடல் பெலக்க அமுதம் ஊட்டி' என்று ஒதுகின்றார். 'புவனம் என்னும் சொல் பூமியைக் குறிக்கின்றது. பகல வனிடத்திலிருந்து சிதறி விழுந்த சிறு துண்டே பூமி என்பது அறிவியல். கதிரவனோடு ஒப்பிட்டு நோக்கும்போது பூமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/261&oldid=892265" இலிருந்து மீள்விக்கப்பட்டது