பக்கம்:தாய்மை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - தாய்மை

ஆசிரிய நடைத்தே வஞ்சியேனை வெண்பா நடைத்தே கலியென மொழிப

... - (செய். சூ. 108) என்றும் காட்டுவர். பண்புற வென்றதனால் ஆசிரியமும் வெண்பாவும் இயல்பெனவும் மற்றவை விகாரமெனவும் கொள்க’ எனக் காட்டி நச்சினார்க்கினியர் இயல்பான பாக்கள் இரண்டெனவே கிளத்துவர். இனி, இப் பா வகைகள் பொருள்களின் அடிப்படையிலேயே சிறக்க, அவற்றொடு பொருந் தி ய பிறவற்றையும் சிறிது காண்போம். பாவும் பிறவும்

செய்யுளியலில் பாவின் இலக்கணம் காட்டிய ஆசிரியர் மேல் அதனொடு பொருந்திய பிறவற்றையும் சுட்டிக் காட்டுகின்றார். முன் 79 ஆம் சூத்திரத்தில்,

பாட்டு உரைநூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொல்லோ டவ்வேழ் கிலத்தும்.’ - . (செய். சூ. 79) என்று கூறியபடி பாட்டின் அடியொற்றிய மற்றவைகளை யும் சிறிது எண்ணிப் பார்த்தல் ஏற்புடைத்தாகும் எனக் கருதுகிறேன். பாக்களால் ஆகிய நூலின் தன்மையை விளக்கிய தொல்காப்பியர், அந்நூல்களின் அமைப்பில் வரும் ‘பா'வின் தன்மையைச் சூத்திரம் என்ற பெயரால் விளக்கிக் காட்டுகிறார்.

சூத்திரம் என்பது,

ஆடி கிழலி னறியத் தோன்றி

காடுத லின்றிப் பொருள்கனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே ‘

|செய். சூ. 1691 எனக் காட்டுவர். சிறு ஆடியில் உலகனைத்தும் ஒளிரக் காட்டுவது போன்று, சிறு சூத்திரத்து விளக்கம் காட்டப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/142&oldid=684533" இலிருந்து மீள்விக்கப்பட்டது