பக்கம்:தாய்மை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை 213

என்று சொல்லி, சிறிது சமயக் காழ்ப்பினை நாட்டிலே தூவி விட்டார் என்பது என் கருத்து. - -

பெரி யோர் க ளே! புத் த பிக் கு னி யா கி ய மணிமேகலையார் தமிழ்நாட்டவர்; த மி ழ் நாட்டுக் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவர்; தீவதிலகையால் பழம்பிறப்பு உணரப் பெற்றவர்; மணிமேகலா தெய்வத் தால் பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர். ஆபுத்திரன் அமுதசுரபியைக் கையிடைப்பெற்றுப் பாரகமடங்கலும் பசிப்பிணி அறுக’ என்று உணவு ஊட்டியவர். வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று வழிகாட்டியவர். துறவறம் மட்டுமல்ல இல்லறமும் சிறந்தது தான். ஆகவே நீங்கள் துறவியாக வேண்டும் என்று வற்புறுத்தவில்லை என்ற உண்மையை விளக்கிக் காட் டி ய வ ர். பல சமய உண்மைகளைக் கண்டவர். முன்னைப் பி ற ப் ைப உணர்ந்தவர். பின்னைப் பிறப்பை அ றி ந் த வ ர். இத்தனைக்கும் மேலாக வையகம் என்றும் வாழ வேண்டும் என்று மனப்பாட்டறம் கொண்டவர். அவர் காட்டிய அறம் நாட்டிலே என்றென்றும்-தழைக்க -சிறக்கஒங்குக-உயர்க என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்.”

  • இது வெறும் மேடைப் பேச்சாக இருப்பதால் சற்றே மாறுபட்டிருக்கும்.

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/215&oldid=684765" இலிருந்து மீள்விக்கப்பட்டது