உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை 13 "தேவீ! நான் எப்படியோ-விதியின் மாயையால் உங்கள் வாழ்வில் குறுக்கிட்டு விட்டேன். என்னை மன் னித்து விடுங்கள்! இனி நான் எங்கு போவேன்; தங் கள் தங்கையாக என்னைக் கருதி எனக்கு வாழ்வளியுங் கள்!" என்று கோப்பெருந்தேவிபின் பாதங்களில் கண் ணீரைச் சொரிந்தாள். மன்னன்-மகாராணி மகாராணி-இளவரசன் அவளது மாய்மாலத்தில் மயங்கினர். அனைவருமே "அரண்மனையில் புதிய இன்பம்! சந்தோஷமான திருப்பம்! அரசரும் அரசியும் ஒற்றுமைப் பட்டுவிட்டனர். சுழற்கண்ணி, தன் தவறுகளை உணர்ந்து திருந்தி விட் டாள். அப்பப்பா ; இளையராணி இப்போது இன்ப சாகரனை எப்படி கவனிக்கிறாள் தெரியுமா? பெற்ற தாய் கூட இவ்வளவு அன்பு காட்ட முடியாது!" தரபுரி முழுதும் குரல் கிளம்பியது. . என்று சுந் இளவரசன், இப்பொதெல்லாம் தாயிடம்கூட அவ் வளவு அதிகமாகத் தங்குவதில்லை. இளையராணியின் மாளிகையிலேயே விளையாடிக் கிடக்கிறான். அவள் கையால்தான் அவனுக்கு உணவு தரவேண்டும். அவள் சொன்னால்தான் எதையும் கேட்பான். இது கண்டு அரண்மனையே அதிசயித்தது. அரசரும் சுழற்கண்ணி யின் மீது புதிய பாசம் கொண்டார். அரசியும், அவளைத் தன் அருமைத் தங்கை போல நடத்தினாள். தங்கையின் நெஞ்சிலே நெருப்பை அவள் கண்டாள்! புகையும் எங்கே