பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12? சுவர் மாடத்தில் இருந்த மருந்துப் புட்டிகளைத் தட. விள்ை. அதற்குள் எஸ். ஒ. ஒற்றைக்காவில் நின்று கொண் டிருப்பதை அறிந்து தடுமாறினுள். சுற்றிச் சூழ நோக்கினுள் , நாற்காலிக்காகத் தேடினுள். அது அங்கு ஏது? தீனமூர்த்தி இதயம் உள்ளவர். புரிந்துகொண்டார்: என்னைப்பத்தி இப்போ முக்கியமில்லே! முதல்லே உங்க கண வரைக் கவனியுங்க!...ஆமாம், நல்ல ட்ரீட்மெண்ட் கொடுப் பதுதானே?' என்று அனுதாபமும் ஆதரவும் பின்ன கேட் டார். 'எல்லாம் பார்த்தாச்சுங்க. ...” அவள் விம்மினுள். இப்போதுதான் சுந்தரியின் கணவனுக்கு வலிப்பு நின் றது. லேசாக விழிகளைத் திறந்தான். அதே தருணம். சுந்தரியின் விம்மலைக் கேட்டதும், தீனமூர்த்தி மனம் கசிந்தார். அவர் கண்களும் கலங்கித் துளும்பின. உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே நடந்து சுந்தரியை நெருங்கி அவளது. கரங்களைப் பற்றியவாறு, சுந்தரி! உங்களுக்காக நான் ரொம்பவும் அனுதாபப்படுகிறேன்!. ..பகவான்த்ான் உங் களுக்காக மனம் இரங்கிக் கருணை செய்ய வேணும்!” என்று தேம்பினர். அடுத்த இமைப்பில், கைகளை விடுவித்துக் கொண்டார், கைண்ட்லி எக்ஸ்க்யூஸ்மி. ..சுந்தரி!” தீயைத் தீண்டியவள் போல அப்படியே வெந்து துடித் தாள் சுந்தரி. உங்க தூய்மையான பாசத்துக்கு நன்றிங்க ஸ்ார்!...” என்று கை கூப்பி வணங்கிளுள். சுந்தரியின் கரம் பற்றியவனை மீண்டும் நோக்கிய தீன மூர்த்தி இன்னமும் விழி திறக்காமல் இருக்கக் கண்டு, விடை பெற வாசலுக்கு வந்தார். ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து நீட்டி'அவசரத்துக்கு இதை வைத்துக்கொள்ளுங்க...