பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 போலவே இருந்து விட்டதால், குடி ஒன்றும் முழுகிப் போய் விடவில்லை. இரண்டு பேரும் முந்நூறு ரூபாய்க்கு கிட்டத் தட்டச் சம்பாதித்தார்கள். இந்நிலையிலே, மண்ணில் விண்ணும் விண்ணில் சொப் பன லோகமும் உருவாகத் தடை ஏதும் இருக்கவில்லை. கணவனும் மனைவியும் தேநிலவுப் பயணம் போய் வந் தார்கள். கடல் மல்லைக் காற்று அவர்கள் மேனிகளைத் தாலாட்டிற்று. அவன் தமிழில் பாட, அவள் மலையாளத்தில் பாடு வாள்!... பாட்டு என்றுமே இனிக்கவா செய்ய முடியும்? என்னவோ, அவர்களது பாட்டின் கலப்பு, விதிக்கு ரசனை தட்ட வில்லையோ? ஏன் அப்படி? அதுதான் அவர்களது இன்பத்தின் எல்லைக்கு வாய்த் - ?வரம்பா ساسًا يَ அன்று ஆபீஸ் சென்றவன், மீளும் தருணம், தன்னை மீளாத நரகத்தில் தள்ளிக் கொண்டு டாக்ளியில் வந்து சேர்ந்து, அவளேயும் மீட்கமுடியாத நரகத்தில் மறைமுக மாகத் தள்ளவும் செய்து விட்டானே! பாவம்'..

வந்தணைந்த பாவத்தின் அணையாத புண்ணியம் போல, அதோ அவனும் அவளும் புது மணப் பூக்களாக புன்னகை ஆயும் புது நிலவும் போல போட்டோவில் காட்சி தருகின்ருர் கள்!...

“அத்தான்!...” விளித்தாள்.