பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 'உன் வீட்டுக்காரர் வரமாட்டார் என்றுதான் தோன் றுகிறது: அக்கா!' "இன்றைக்கா? அல்லது என்றுமேயா?” 'iணுக ஒன்றை ஒன்பதாகப் பெருக்கி உடலைப் போட்டு அலட்டிக் கொள்ளாதே, அக்கா. வேளை கெட்ட வேளையில் இப்படிப்பட்ட மன வேதனை கூடவே கூடாது என்று டாக்டர் சொன்னதை மறந்து விடுகிருயே..! இன்று: தான் அக்கா, அவர் வரமாட்டார். பட்டணத்துக்குப் புறப் பட்டாராம் உன் கணவர், என் அப்பா பார்த்தாராம்: சொன்னர். நாளே, மறுநாள் வந்து விடலாம்...' என்மேனி முழுமையும் மின்னெளி பாய்ந்தது: பதை பதைத்தேன். என் கணவர் பட்டணத்துக்கு என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் போனதைப் பற்றிக்கூட. மனசை அல்ட்டிக் கொள்ளவில்லை. ஆனல். இரண்டு நாள் முந்தி, அவர் செய்த சபதம்தான் என்னைத் தூண்டிலிட்டு இழுத்து வேதனைப் படுத்தியது. உயிர் விளிம்பில் தொட்டும் தொடாமலும் என் உடம்பு உறவாடிக் கிடந்தது. எவ்வளவு, அபாக்கியவதி இந்த அபலை...! மலைக்கோட்டை மணி நடுநிசியில் இரண்டு முறை ஒலித்து முடங்கியது. ‘இவர் பட்டணம் போயிருக்கிருர் ஆம், அவர் சப தத்தை நிறைவேற்றப் பட்டணம் போய்விட்டார். ஆண். பிள்ளை அவர். நானே பெண்; பேதைப் பெண்...' - என் உள்மனம் நினைவுச் சரத்தைத் தொடுத்துக் கொண்டே போயிற்று. மனத்திற்கு ஒய்வு ஏது: ஒழிவு ஏது? சலனம், சலனம்தான் போலும். சலனம் என்ருல் சாந்திக்கு, வழி இராதா?. கீறல் பட்ட இசைத்தட்டு ஒலிப்பதிவைத் திரும்பத் திரும்ப ஒப்புவிக்குமல்லவா? அதே போல அந்தச் சம்பவம் என் நினைவில் தொப்பென்று குதித்து நின்றது.