பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

மக்சீம் கார்க்கி


ரீபின் அங்கு வந்து கரகரத்த குரலில் மெதுவாகக் கேட்டான்.

“தூங்கிவிட்டாளா?”

“ஆமாம்.”

அவன் அங்கு சிறிது நேரம் நின்றவாறே தாயின் முகத்தையே பார்த்தான்; பிறகு பெருமூச்சு விட்டுவிட்டு மெதுவாகச் சொன்னான்:

“மகன் சென்ற மார்க்கத்தில் தானும் பின்பற்றிச் செல்லும் முதல் தாய் இவள்தான் போலிருக்கிறது!”

“சரி, அவளைத் தொந்தரவு பண்ணக்கூடாது. நாம் வெளியே போகலாம்” என்றாள் சோபியா.

“சரி. நாங்களும் வேலைக்குப் போக வேண்டியதுதான், உங்களோடு பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்றுதான் விருப்பம். ஆனால், நமது பேச்சை மாலையில் வைத்துக்கொள்ளலாம். டேய், பையன்களா! புறப்படுங்களடா!”

அவர்கள் மூவரும் சோபியாவை அங்கேயே விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

“நல்லதாய்ப் போயிற்று. இவர்கள் நம்புரிமையோடு பழகிக்கொள்கிறார்கள்” என்று நினைத்தாள் தாய்.

அந்தக் காட்டுப் பிராந்தியத்தின் நெடிமணத்தோடு, தார் நாற்றத்தையும் சுவாசித்தபடி அப்படியே தூங்கிவிட்டாள் தாய்.

6

அந்தத் தார் எண்ணெய்த் தொழிலாளிகள் தங்களது. அன்றைய வேலை முடிந்த உற்சாகத்தோடு திரும்பி வந்தனர்.

அவர்களது பேச்சுக் குரல் தாயை எழுப்பிவிட்டுவிட்டது: அவள் எழுந்திருந்து, புன்னகை செய்துகொண்டும் கொட்டாவி விட்டுக்கொண்டும் வெளியே வந்து சேர்ந்தாள்.

“நீங்களோ வேலைக்குப் போனீர்கள். நானோ அங்கே சீமாட்டியைப்போல் செல்லமாகத் தூங்கினேன்” என்று கூறிக்கொண்டே அவர்களை வாஞ்சையோடு பார்த்தாள்.

“அதற்காக உன்னை மன்னித்துவிடலாம்” என்று சொன்னான் ரீபின். அவனது அமித சக்தியைக் களைப்பு ஆம்கொண்டு விழுங்கிவிட்டது. எனவே அவன் சாந்தமாக இருந்தான்.

“இக்நாத்! கொஞ்சம் தேநீர் சாப்பிட்டால் என்ன? நாங்கள் இங்கே. எங்கள் வீட்டு வேலைகளை ஒவ்வொருவராக முறை வைத்துச்