பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தேன்கதலி நாடு

இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அந்தத் தங்கக் குதிரை காற்றினும் வேகமாகப் பறந்து சென்றது. காடும் மேடும் கடலும் மலையும் மாறி மாறிக் கடந்து மிகத் தொலைவில் உள்ள தேன்கதலி நாட்டில் போய் இறங்கியது. அங்கு இறங்கியவுடன் நெடுந்தூரம் பறந்து வந்த களைப்பில் அந்தக் குதிரை சோர்ந்து விழுந்தது. அப்படியே அதற்கு மூச்சு நின்று அது இறந்து போய் விட்டது. வில்லழகன், அதை ஒரு மரத்தடியில் நிறுத்திவைத்து, அதற்கு ஒரு வேதாளத்தைக் காவல் வைத்தான்.