பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



134 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


வெற்றிடத்தை நோக்கி ஓடும் ஆற்றைப் போல, முழுமையாகப் பெறும் கடல் போல, ஆணும் பெண்ணும் முடிவில்லாத வெறுமையுறுவது, நிரப்புதல் ஆகியவற்றை நம்பி ஒருவரை ஒருவர் அடைகின்றனர்

பெறுவது என்பது வெறுமையாக்குவதும், முழுமையடைவதும், நிரப்புதல் என்பது முழுமை யாக்குதலும் வெறுமையாக்கலும்.

159. வெற்றிடத்தை வெறுமை செய்

இலை இலையாக இருக்கும் போது மரத்தை, அறிந்து கொள்ள முடியாது மீன், அதாக இருக்கும் போது கடலை அறியாது. ஆண் ஆணாக இருக்கும் போது எவ்வாறு பெண்ணை அறிவான்? இது போலவே பெண், பெண்ணாக இருக்கும் போது எவ்வாறு ஆணை அறிந்து கொள்ள முடியும்?

ஒவ்வொன்றின் வெளிப்புறத்திலும் வெற்றிடம் உள்ளது. இதுதான் அடைந்து நிரப்பி, புரிந்து கொள்கிறது

ஆணாக இருந்து ஆணைக் காணாதே. பெண்ணாக இருந்து பெண்ணைக் காணாதே. மென்மையாக இரு ‘இயற்கை'யை நம்பு, ஆணையும் பெண்ணையும் விட்டுவடு வெற்றிடத்தை வெறுமை செய்.