பக்கம்:திரட்டுப் பால்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திரட்டுப்பால் பெற்றஇன்பம் பெரிது.இராப்பகல் அற்றஇடம்காட்டி அங்கே இருந்து துதிக்கும் பேற்றை அடைந்தவர். அவருக்கு, முருகனுடைய வடிவேலும் திருமுகமும் பன்னிரு தோளும் எங்கே நினைத்தாலும் அங்கே முன் வந்து நின்றன. ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்தவர். ஆகவே முருகனுடைய அருட் பதங்களே உள்ளும் புறம்பும் சேவித்து இண்பம் கண்டவா. இவ்வாறு முருகனை உருவமவுேம் அருவமாகவும் அருள் வடிவாகவும் ஆனந்த சாகரமாகவும் கண்டு உணர்ந்து அதுவித்து இந்த அற்புதமான நூல் வழங்கி .யிருக்கிருர் அருணே முனிவர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்:என்பது மெய்ஞ்ஞானிகளின் கருத்தாகையால் இவ்வாறு தம் அநுபவங்களைச் சொல்லி, நாமும் இந்த வழியிற் சென்று பரமானந்த சாகரத்தில் மூழ்க மாட்டோமா? என்ற ஆவலே உண்டாக்குகிருர், அதுபவத் தைத் தாம் அநுபவித்ததோடு நிறுத்திக் கொள்: சமல் பிறருக்கும் வழிகாட்டு பவர்கள் பரமஹம்ஸ் கள். அருணகிரி நாதப் பெருமான் ஒரு மெய்ஞ்ஞானி, மேலான பக்தர், இrவன்முக்தர், பரமஹம்சர். அவர் திருவாய் மலர்ந்தருளிய அலங்காரத்இைப் படிப்பதே புண்ணியம்; படித்து உணர்வதால் நல்லறிவும் அருளும் கிடை க்கும். தமிழில் இந்த நூல் அமைந்தது தமிழர் செய்த புண்ணியப் பயன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/38&oldid=894397" இலிருந்து மீள்விக்கப்பட்டது