பக்கம்:திரட்டுப் பால்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கந்தர் அலங்காரம் பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே. தாரா கணம்எனும் தாய்மார் அறுவர் தருமுலேப்பால் ஆரா துமைமுலேப் பால்உண்ட பாலன் அரையில்கட்டும் சீராவும் கையில் சிறுவாளும் வேலும்என் சிந்தையவே; வாரா தகல்அந்த காவந்த போதுயிர் வாங்குவனே. தகட்டிற் சிவந்த கடம்பையும் நெஞ்சையும் தாள் இணைக்கே புகட்டிப் பணியப் பணித்தருள் வாய்;புண்ட ரீகன்அண்ட முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்டஎட்டிப் பகட்டில் பொருதிட்ட நிட்டுர சூர பயங்கரனே. தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிழிசைத் தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளம்;தனிவேல் வாங்கி அனுப்பிடக் குன்றங்கள் எட்டும் வழிவிட்டவே. (80) (81) (82) (83)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/64&oldid=894426" இலிருந்து மீள்விக்கப்பட்டது