பக்கம்:திரவிடத்தாய்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

"சுரஞ்செல் கோடுயர் கதுமென விசைக்கு நரம்பொடு கொள்ளு மத்தத் தாங்கட் கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர் நெடும்பெருங் குன்ற நீந்தி" (நற்.212)


என்று குடவாயிற் கீரத்தனாரும்,


"குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே" (குறுந். 11)


என்று மாமூலனாரும்,


"நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புன னன்னாட்டு" (சிலப். 8:1-2)


என்று இளங்கோவடிகளும் பாடியிருப்பதால், கடைக்கழகக் கலத்தில் வேங்கடத்திற்குத் தெற்கில் தெலுங்கு வழங்கவில்லை யென்பது வெளிப்படை.

நம்பியாரூரர் (சுந்தரமூர்த்தியடிகள்) சேரநாடு சென்று மீண்டபோது, அவர் சேரமான் பெருமாள் நாயனாரிடம் பெற்ற பொருளைத் திருமுருகன் பூண்டியில் சில வடுகர் (அல்லது வடுகவடிவில் வந்த சிவபூதங்கள்) வழிப்பறித்ததால், 9ஆம் நூற்றாண்டிலேயே வடுகர் கொங்கு நாட்டில் குடியேறிவிட்டனர் என்பது போதரும்.


"கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொ டாறலைக்குமிடம் முடுகு நாறிய வடுகர்வாழ் முருகன் பூண்டிமா நகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிருந்தீரெம் பிரானிரே"


என்பது நம்பியாரூரரின் திருமுருகன் பூண்டிப்பதிக முதற் செய்யுள்.

"வடுக ரருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேயெருமை என்றிவை யாறுங் குறுகா ரறிவுடை யார்" (தொல். சொல். சேனா. மேற். 91)


என்பது ஒரு பழஞ் செய்யுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/92&oldid=1430755" இலிருந்து மீள்விக்கப்பட்டது