பக்கம்:திரவிடத்தாய்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இவற்றினாலும், யாழ்ப்பாண அகராதியில் வடுகன் என்னும் பெயருக்கு மூடன் என்றும் பொருள் கூறியிருப்பதாலும், முதன்முதலாய்த் தமிழ்நாட்டிற்கு வந்த வடுகர் (கம்பளத்தார்) முரடராயிருந்தன ரென்றும், தமிழர் அவரொடு உறவாடவில்லை யென்றும் அறியலாம்.


"நீரெலாம் சேற்று நாற்றம் நிலமெலாங் கல்லும் முள்ளும் ஊரெலாம் பட்டி தொட்டி உண்பதோ கம்பஞ் சோறு பேரெலாம் பொம்மன் திம்மன் பெண்களோ நாயும் பேயும் காருலாங் கொங்கு நாட்டைக் கனவிலுங் கருதொ ணாதே"



"வடகலை தென்கலை வடுகு கன்னடம் இடமுள பாடையா தொன்றி னாயினும் திடமுள ரகுகுலத் திராமன் றன்கதை அடை வுடன் கேட்பவ ரமர ராவரே"


என்று கம்பர் பாடியிருப்பதால், 12ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வடுகர் நிலைத்துவிட்டனர் என்பதை அறியலாம்.

கோதாவரி, கிருட்டிணா கோட்டங்களைச் சேர்ந்ததும் கீழைச் சாளுக்கியம் எனப்பட்டதுமான வேங்கைநாட்டை 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகளிற் சோழமன்னர் ஆண்டு வந்தனர்; கீழைச் சாளுக்கியருடன் மணவுறவும் பூண்டனர். முதலாம் இராசேந்திர சோழன் வடக்கிற் படையெடுத்துச் சென்று கங்கை நாடு வரை அடிப்படுத்தினான். கி.பி. 1115-ல் முதற் குலோத்துங்கன் தனக்குக் கலிங்க நாட்டுத் தெலுங்க மன்னன் திறை கொடுக்க மறுத்தமை காரணமாகத் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமானை ஏவி அவனொடு பொருது வென்றான்.

"மெய்க்கூத்தாவது, தேசி வடுகு சிங்களமென மூவகைப் படும்", "சுற்றுதல் எறிதல் உடைத்தல் முதலாகிய வடுகிற்குரிய கால்களும்", "ஒற்றையும் இரட்டையும் தேசிக் கூறாகலானும் இரட்டையும் இரட்டைக்கிரட்டையும் வடுகிற் கூறாகலானும்", "வடுகும் மட்டதாள முதலாக ஏக தாள மீறாக வைசாக நிலையிலே ஆடி முடித்த பின்னரென்க. என்னை? 'வைசாக நிலையே வடுகிற்கும் வரையார்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/93&oldid=1430756" இலிருந்து மீள்விக்கப்பட்டது