பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I590 திருக்குறட் குமரேச வெண்பா 10. ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம் மாண்பின் இயற்கை மருவில் அரும்பொருளே வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே. (வ8ளயாபதி) பல்கதிர் விரித்துத் தோன்றிப் பாடுசெய் கதிரே போல மல்லல் நீர் உலகில் தோன்றி மறைந்திடும் நூம்மைவிட்டுச் செல்வம் என்று உறுவதற்கும் செல்வம் என்று உரைக்கும் (பேர் நன்று அல்லகல விளைப்ப தாகாது அரும்பெறற் செல்வம் பர்வாய்! (குசேலம்) சுழல்சக டக்கால் போலும் தோன்றியே அழியின் போலும் அழல்மன வேசை போலும் அரு நிதி மேவி நீங்கும் பழமைபோல் அதனை நம்பிப் பழியுறச் செருக்கல் மேக நிழலினை நம்பிக் கைக்கொள் நெடுங்குடை நீத்தல்,ஒப்பே. (நீதி நூல்) அரையது துகிலே மார்பினது ஆரம் முடியது முருகுநாறும் தொடையல் புடையன பால்வெண் கவரியின் கற்றை மேலது மாலே தாழ்ந்த மணிக்கால் தனிக்குடை . முன்னது முரசு முழ்ங்குதானே இந் நிலை இனைய செல்வத்து ஈங்கிவர் யாரே? தேவர் அல்லர் இமைப்பதும் செய்தனர் மாந்த ரேஎன மயக்கம் நீங்கக் களிற்றுமிசை வந்தனர் நெருநல் இன்றிவர் பசிப்பிணி காய்தலின் உணங்கித் துணியுடுத்து மாசுமீப் போர்த்த யாக்கை யொ டு தாமே ஒருசிறை இருந்தனர் மன்னே. (ஆசிரியமாலை) வந்துடன் வணங்கும் வானேர் மணிபுனை மகுடகோடி தந் திரு வடிகள் ஏந்தும் தமனியப் பீடம் ஆக இந்திர விபவம் பெற்ற இமையவர் இறைவர் ஏனும் தந்திரு உருவம் பொன்றத் தளர்ந்தனர் அனந்தமன் ருே. (யசோதர காவியம்) காடு போந்தனன் இந்திரன் பொன்னகர் கரிந்து பாடு சேர்ந்தது சயந்தனும் சிறையிடைப் பட்டான்