பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அறிவு ைட ைம 23翼賞 உள்ளத்தை ஒடுக்கி நல்ல வழியில் நன்கு உய்ப்ப வர் உயர்ந்த மேதையாய் ஒளி பெற்று கிற்கின்ருர். இவ்வுண்மை பதஞ்சலிபால் அறிய கின்றது. ச ரி த ம் இவர் ஆதிசேடன் அமிசமாய் இவ்வுலகில் அவ தரித்தவர். அரிய கலைஞானங்களே யெல்லாம் இயல் பாகவே தெளிந்தவர். பாணினி முனிவர் இயற்றியுள்ள இலக்கண நூலுக்கு இவர் தெளிவான விரிவுரை அருளி யுள்ளார். ஆரிய மொழியில் சீரிய பேரொளியாய் அங்தி வியாக்கியானம் விரிந்து சிறந்து திகழ்கின்றது. உலக நிலைகளில் உள்ளத்தைச் செலுத்தாமல் ஏகாந்தமாய் ஒதுங்கி யிருந்தே அவ்வுரையை இவர் எழுதி யுள்ளார். புறத்தே புலேயாய் அலேயாமல் அகத்தே மனம் நலமாயடங்கின் மகிமைகள் பல விளே யும் என இவர் விளக்கி யிருக்கிருர் யோகத்தைக் குறித்து இவர் செய்துள்ள நூல் மேலான விவேகத்தை வி&ளத்துள்ளது. அந்நூல் பதஞ்சலி யோக சூத்திரம் என விளங்கி வருகிறது. கலைஞானங்களில் சிறந்த இவர் தவஞான யோகியாய் இறைவன் திருவருளே எய்த விழைந்தார். பரமனுடைய அருளாடலே நேரே கான விரும்பினர். இவர் கண்டு களிக்குமாறு ஆண்டவனும் ஆன |ந்தத் ;", и ண்டவம் -2', 9. நன்கு காட்டி யருளிர்ை. பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக! (திருவாசகம்} பரமன் இந்தப் பதஞ்சலிக்கு அருள் புரிந்திருப்பதை மாணிக்கவாசகர் இவ்வாறு உவங்து புகழ்ந்துள்ளார். பூவாது பழுக்கும் குலடிப் பனசம் பார்கிழித் தோடிப் பணியுல களந்த வேர்தொறும் வேர்தொறும் வெவ்வேறு பழுத்து முட்புறக் கனிகள் தூக்குவது ஒட்பமொடு பதஞ்சலி முனிவனேப் பார்கொளத் தந்த பிலங்கொளக் கொடுக்கும் பலங்கள் பல நிகர்க்கும். (சிதம்பர மும்மணி 8);