பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பாலில் குறிப்பு அறிவுறுத்தல் என்றொரு அதி கிரமும் உண்டு. அந்த வேறுபாடுகளைச் சிந்தனை செய்து புரிந்து கொள் ளுதல் வேண்டும்.இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாத தான செல்வத்தின் சிறப்பினைப் 'பொருள் செயல்வகை" என்ற அதிகாரத்தில் கூறிப் பயனில்லாமல் போகின்ற செல் வத்தினை 'நன்றியில் செல்வம்" என்ற அதிகாரத்திலும் தெளிவுபடுத்துகிறார். இவ்வாறாகப் பற்பல அதிகாரங்களையும், குறட்பாக்க ளையும் இடத்திற்கேற்பச் சிந்தனை செய்து ஒப்பிட்டுப் பார்த்து விளக்கம் காணுதல் வேண்டும். சிறப்பாகச் சொல்லப்பட்டபவை, பொதுவாகச் சொல் லப்பட்டவை, சிறப்பு, பொது என்ற சிந்தனைக்குரியவை என்பனவாகச் சிந்தனை செய்து அறிதல் வேண்டும். திருவள்ளுவர் அருளிய குறட்பாக்கள் அனைத்தும் பொதுத்தன்மை நிறைந்ததாகும். அன்றாட வாழ்க்கையில் பின்பற்றிச் செயல்முறையில் ஒழுக வேண்டியவைகளாகும். வள்ளுவர் வழியில் நின்று வாழ்க்கையில் சிறப்பினை அடைவோமாக, திருக்குறளார் வீ. முனிசாமி