அறத்துப்பால்
இல்லற இயல்41
அறத்துப்பால் - இல்லற இயல் 41
21. தீவினை அச்சம்
(தீமையான செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதலாகும்)
1. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. 201
தீய செயல் என்னும் செருக்குடைய அறியாமைக்கு தீவினையாளராகிய தீச்செயல் நெஞ்சங்கொண்டவர்கள் அஞ்சமாட்டார்கள். சீரிய சிறப்புடையவர்கள் அஞ்சப் படுவார்கள்.
2. தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப் படும். 2O2 தீச் செயல்கள் தீமையினையே கொடுப்பதால் தீச் செயல்கள் தீயினைவிடக் கொடுமையென்று அஞ்சப் படும்.
3. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய -
செறுவார்க்கும் செய்யா விடல். 203 தமக்குத் துன்பம் உண்டாக்குபவர்களுக்கும் தீவினைகளைச் செய்யாமல் விடுதல் என்பதை அறிவுகள் எல்லாவற்றிற்கும் தலையாய அறிவு என்று நல்லோர் சொல்லுவர்.
4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு, 204 ஒருவன் மறந்தேனும் பிறனுக்குத் தீமைதரும் செயல்களைச் செய்யாதிருப்பானாக; அப்படி நினைப்பானாகில்
அவனுக்குத் தீங்கினை அறம் நினைக்கும். 5. இலன்ன்ைறு தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. 2O5 நான் வறியவன் என்று நினைத்து அதனைப் போக்க ஒருவன் தீய செயல்களைச் செய்யா திருப்பானாக; அப்படிச் செய்வானானால், மீண்டும் வறியவனாவான்.