பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 அறன் வலியுறுத்தல்

9


3.ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.

நாம் நமக்கு முடிந்த அளவில் சமயம் நேர்ந்த போதெல்லாம் அறச் செயலினை இடைவிடாமல் செய்து வர வேண்டும் 33

4.மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

மனத்தில் சிறிதும் குற்றமில்லாமல் இருத்தலே அறம் ஆகும். மனத்தில் பொறாமை, கோபம் முதலிய குற்றங்களை யெல்லாம் வைத்துக் கொண்டு, நீதி நூல்களில் கூறியுள்ள பிற அறச்செயல்களைச் செய்வதில் சிறிதும் பயன் இல்லை. அப்படிப்பட்ட அறச்செயல்கள் வீண் பெருமைக்காகச் செய்கின்ற ஆரவாரச் செயல்களாகவே முடியும். 34

5.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களையும் நீக்கி நடப்பதே அறமாகும். 35

6.அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

‘நமக்கு நல்ல காலம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.’ அல்லது ‘நாம் இப்போது இளமை வாய்ந்திருப்பதால் வயது முதிர்ந்தபோது பார்த்துக் கொள்ளலாம்’ என்றெல்லாம் காலம் போக்காமல் அறத்தினை உடனே செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் நமக்கு வறுமை, பிணி, மூப்பு முதலியவற்றால் அழிவு நேர்ந்தபோதும் அஃது அழியாத துணையாக இருந்து அந்தத் துன்பங்களைப் போக்கும். 36

7.அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை.

அறத்தின் பயன் இது என்று நாம் நூல்களைக் கொண்டு ஆராய்ந்து அறிய வேண்டியதில்லை. பல்லக்

தி—2.