பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவம்

69


3.துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

துறந்தவர்களுக்கு உண்டி, உடை முதலியன தந்து காப்பாற்றுவதற்காகத் துறந்தவர் அல்லாத இல்லறத்தார் தவம் செய்வதை மறந்தார்கள் போலும்.

துறந்தார்-வீடு, நிலம், மனைவி, மக்கள் முதலியவைகளை விட்டு நீங்கியவர், துப்புரவு-பாதுகாப்பு. 263

4.ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

தாம் நினைத்தால் தமக்குத் தீமை செய்யும் பகைவரை அழித்தலும், நமக்கு நன்மை செய்வோரை உயர்த்தலும் ஆகிய ஆற்றல் தவம் செய்வோர்கு அத்தவத்தால் வரும்.

ஒன்னார்-பகைவர்; தெறல்-கெடுத்தல், அழித்தல்; உவந்தார்-தம்மால் விருப்பப்பட்டவர்; ஆக்கல் -உயர்த்துதல், 264

5.வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

ஒருவர் தவத்தின் வல்லமையால் தாம் விரும்பியவைகளையெல்லாம் விரும்பியவாறே அடைதலால், செய்யக் கூடிய தவத்தை இந்தப் பிறவியிலேயே செய்தல் வேண்டும். 265

6.தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு.

தவம் செய்பவர்களே தம்முடைய கடமைகளைச் செய்பவர் ஆவர். அவ்விதம் தவம் செய்யாதவர் அவ்வாசை வலையுட் பட்டுத் தமக்குப் பயன்படாத வீண் செயலைச் செய்கின்றவரே ஆவர். 266

7.சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.