3 20 திருக்குறள் நாட்டிலே நல்ல தண்ணியாய் வற்றாமலிருக்கிற நீரும். நெருங்கின காடும், அதற்கப்புறம் நீரும் நிழலுமில்லாத வெளியு மாயிருக்கிறதே அரணாவது நீரும் நிழலுமில்லா விட்டால் பகைவருக் காதர வில்லாமற் போம்; ஆதரவில்லாவிட்டால் வெல்லப் போகா தென்பதாம். 보_ 743. உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கின் அமைவர ணென்றுரைக்கு நூல் என்பது உயர்வும் அகலமுங் கெட்டியும் அருமையு முடைய மதிலை அரணென்று சொல்லுவர் நூலோர் என்றவாறு. உயரம் ஏணிக் கெட்டாதது. அகலம், பகைவராலே சுரங் கம் வெட்டப் போகாத அடியகலம், உயர்வகலம் மனுஷர்' நின்று சண்டை பண்ணத் தக்கது. கெட்டியாவது கட்டப்பாறை உலக்கை முதலானதுக்களாலே இடிக்கப் போகாதது. அருமை யாவது, கல்லுக்கவன் முதலானதுகளெறியப் போகாதது இப் படிப்பட்ட மதிலை யரணென்று சொல்லப்படு* என்றவாறு. க. 744. சிறு காப்பிற் பேரிடத்த தாகி யுறு பகை யூக்க மழிப்ப தரண் என்பது காக்க வேண்டின வழிகள் கொஞ்சமாய் அகலமான இடத்தை யடைவதாய்த் தன்மேல் வந்த பகைவர் மனது சந்தோஷத்தைக் கெடுக்க வல்லதே யரணாவ தென்றவாறு. சிறு காப்பாவது, வாசல் வழியல்லாமல் மற்ற விடங்களெல், லாம் காடு மலையுந் தண்ணியுமாய்" இருக்கிறது. பேரிடமாவது 1. தண்ணிராப் 2. உயரம் 3. அசத்தோர் அச்சு நூல் 4. முதலியவை i. முதல் o வரை யந்திரங்களை யுடைமை 5. கவண்டு - காகிதசுவடி பரல் பகைவர் அணு குதற்கரியது - அச்சுநூல் 6. காண்க - காகிதசுவடி . தண்ணிருமாய்
பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/322
Appearance