ஜைன உரை
447
1088. ஒண்ணுதற் கோஓ வுடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரு முட்குமென் பீடு
என்பது
முகத்தினாலே வருகிற வருத்தம் கூறுகிறது.
போர்க்களத்திலே வந்து எதுத்தவர்கள்[1] எல்லாம் என்னுடைய பெலத்துக்குப் பயப்பட்டு ஓடிப் போவார்கள்; அப்படிக்கொத்த கெட்டி வலுமை இவளுடைய முகத்துக்கு மாத்திரமே பயப்பட் டழிந்த தென்ற வாறு.
பயப்படுகிறது, மதியழிகிறதாம். ௮
1089. பிணையேர் மடநோக்கு நாணு முடை யாட்கு
அணியெவனோ வேதில தந்து
என்பது
ஆபரண நலத்தினாலான வருத்தம் கூறியது. இவள் பார்வை புறத்தியிலே[2] மான் பிணையோ டொத்த பார்வையையும், உள்ளே நாணத்தையு முடைய இவளுக்கு இதுவே ஆபரணமாயிருக்க வேறே ஆபரணங்களை அணிகிறத்தினாலே[3] என்ன பலனுண் டென்றவாறு.
மான்பார்வை, பயப்பட்டுப் பார்க்கிறதாம். ௯
1090. உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்த லின்று
என்பது
தலைமகள் குறிப்பறியப் பட்டவன்[4] சொல்லுகிறது காய்ச்சப்பட்ட கள்ளுத் தன்னைக் குடித்தவனைக் களிப்பிக்கிற தல்லாமல், காமத்தைப் போலே கண்டவர்களை மகிழப்பண்ண மாட்டா தென்றவாறு.
காமம் கண்டவர்களை யெல்லாம் மகிழப்பண்ணு