இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
448
திருக்குறள்
மென்பதாம். ௰
ஆக அதிகாரம் ள௬ க்குக் குறள் சத சா௰
இப்பால் 110. குறிப்பறிதல்
என்பது,
தலைமகன் தலைமகள் குறிப்பினை யறிதலும் தோழி குறிப்பினை *அத்தோழி அவ்விருவர் குறிப்பினையு* மறிதலுமாம்.
1091. இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய் நோக்கொன் றந்நோய் மருந்து
என்பது
தலைமகன் தலைமகள் மனதுக்குறிப்பினை அவள் பார்வையால் அறிந்தது
இவளுடைய கண்களின் பார்வைகள் இப்பொழுது என்மேல் இரண்டு வகை யாச்சுது[1]: அதெப்படி யென்றால், ஒரு பார்வை என்னை வாதை செய்விக்குது[2]: ஒரு பார்வை அதற்கு மருந்தாய் அந்த வாதையைத் தணிப்பிக் கிறதாச்சுது[3] என்றவாறு
வாதை செய்விக்கிறதாவது, அவன் மனதிலே யிருக்கிற காம விகாரத்தை வெளியாக்குகிறது. வாதையைத் தணிப்பிக்கிறதாவது, தன் பேரிலே தயை வைக்கிறதாம். ௧