இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
99 46. சிற்றினம் சேராமை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் கற்றமாச் சூழ்ந்து விடும். 45]
நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்பது ஆகும் அறிவு 452
மனத்தான்.ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்.ஆம் இன்னான் எனப்படும் சொல். 453
மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு இனத்துளது ஆகும் அறிவு. 454
மணந்துய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்துய்மை தூவா வரும் 455
மனந்துயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனத்துயார்க்கு இல்லைநன்று ஆகா வினை. 456
மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். 457
மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து. 458
மனநலத்தின் ஆகும் மறுமை மற்றுஅஃதும் இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. 459
நல்லினத்தின் ஊங்கும் துணைஇல்லை தீயினத்தின் அல்லற் படுப்பது உம் இல் 460