பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
148

மாட்டிக்கொண்டு துடிக்கிறது. தூண்டில் முள்ளில் உள்ள புழு கவர்ச்சி தருகிறது. அதே ஆசையைத்தான் இங்கே முதல் வெற்றி உனக்கு அளிக்கிறது.

‘வரும்; போகும்; இது வெறும் விளையாட்டு” என்று கருதலாம்; வருவது ஒன்று; இழப்பது நூறு; இந்த ஒன்று தான் உனக்குத் தெரிகிறது. இழந்த நூறு பற்றி நீ எண்ணிப் பார்க்க மறுக்கிறாய்.

காயை உருட்டுகிறாய்; எதிரி உன் பொருளைச் சுருட்டுகிறான்; என்றாலும் அந்தச் சூது உன்னை மருட்டுகிறது; அதனால் உன் செல்வம் இருட்டுகிறது.

கிழிந்த சட்டை, கிழிந்த நோட்டு, ஒழிந்த வாழ்வு காரணம் என்ன? அழிந்தது உன் செல்வம்; ஒடுகின்ற குதிரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. எது வெல்லும்? சொல்ல முடியாது. நன்றாக ஓடி வந்த குதிரைதான்; அன்று சண்டித்தனம் பிடித்துவிட்டது; நீ வாழ்க்கையில் நொண்டியாகிவிட்டாய்.

பொழுது விடிந்து பொழுது சாயும்வரை அவன் இருப்பது கழகம்; பல்கலைக்கழகம் அன்று: சூதாடும் இடம்: கையால் உருட்டுவது தாயம்; காயும் கையுமாக அன்று மாலைவரை அங்கேயே கழிக்கிறான்; தன்னை வெல்வார் இல்லை என்று பெருமை பேசுகிறான். சோற்றை மறந்தான்; வீட்டைத் துறந்தான். இவன் இறந்தவன் என்றே எண்ண வேண்டியுள்ளது.

ஒன்று தெரியுமா? தத்துவஞானி ஒருவன் உயிரைப் பற்றியே கவலைப்படமாட்டான்; “வாங்குகிற மூச்ச சுழிமாறிப் போனாலும் போச்சு” என்று தத்துவம் பேசி வந்தான். உடம்பு கெட்டுவிட்டது; மருத்துவனிடம்