பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
150


நாடியைப் பார்த்தால் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். மிகுந்தாலும் குறைந்தாலும் அவர் நோயாளி என்று முடிவு செய்துவிடலாம். ஒரு குறிப்பிட்ட அளவு தான் உடம்பில் சூடு இருக்க வேண்டும். அதிகமாகி விட்டால் சுரம், காய்ச்சல் என்று கூறுகிறார்கள். அதிகக் கொழுப்பு இருந்தால் உடம்புக்கு இழுக்கு என்கிறார்கள். இரத்தக் கொதிப்பு என்பது மிகைப்பட்ட ஒட்டம் உண்டாக்குகிறது. சருக்கரை அதிகம் ஆகிவிட்டால் அதுவும் தப்பு: உப்பு அளவாக இருக்க வேண்டும். தமிழ் மருத்துயப்படி வாதம், பித்தம், சிலோட்டுமம் இந்நாடிகள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்பர்.

மருத்துவத்தை முழுவதும் சொல்லிவிட்டால் மருத்துவருக்கே வேலை இல்லாமல் போய்விடும். மருந்து எல்லாம் அருகே இருந்துதான் ஆளைப் பார்த்துத் தேர்வு செய்து பின் எழுதிக் கொடுக்க வேண்டும். ஆளைப் பார்க்காமல் எந்த மருந்தும் தரமுடியாது.

இந்த நோயாளிகள் யாரைக் கேட்டாலும் என்ன சொல்கிறார்கள்; அஜீர்ணம்; இதுதான் பெருவாரி. அதிகம் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறவர்கள்தாம் மிகுதி. “வேளா வேளைக்குச் சாப்பிடவேண்டும். சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும்; ‘சூப்’ வைத்துக் குடிக்க வேண்டும். வயிறார உண்ணவேண்டும்.” இப்படிச் சொல்லக் கூடாது; இப்படிச் சாப்பிடுவதால்தான் உடம்பு கெடுகிறது.

(1) உண்டது செரிக்கட்டும்;

(2) உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவு சாப்பிடாதே;