பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
156

ஒருவனுக்கு இழிவு அன்று; மனத்தின் திண்மைதான் செல்வம் ஆகும்.

சான்றாண்மைக்கு வரம்பு என்று கூறப்படுபவர் ஊழிபெயர்ந்தாலும் தாம் தம் நிலை பெயரார். கடல்நீர் தன் கரை கடக்கலாம்; இவர்கள் தம் நிறை கடக்க மாட்டார்கள்.

சான்றோர் தம் சால்பு குன்றிவிட்டால் இந்தப் பூமியே தன் சுமையைத் தாங்காமல் சோர்ந்துவிடும்; உலகம் இவ் அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ளாது.

100. பண்புடைமை

‘பண்’ என்னும் சொல்லில் இருந்து பண்பு என்னும் சொல் உண்டாகி இருக்க வேண்டும். பண் இசை எனப்படும்; இனிமை தருவது பண்புடைமை. அந்த இனிமை எவ்வாறு உண்டாகிறது?

எளிமையாகப் பழகு; மற்றவர்கள் உன்னைப் பார்க்க இடம்கொடு; கெடுபிடி கூடாது; பண்புடைமை தம் குடிப்பிறப்பின் உயர்வைக் காட்டும்; நற்சொற்களும், செயல்களும் பண்புடைமை எனப்படும்.

மனிதன் என்பதற்குக் கை, கால், கண் இவை தக்கன வாக அமைந்தால் மட்டும் போதாது; நற்பண்புகளும், செயலும் அவனிடம் அமைவதே மனிதன் என்பதற்கு வேண்டிய அடையாளங்களாகும்.

நீதியும் நன்மையும் நிலவச் செயல்படுவார் பண் புடையார் எனப்படுவர். அவர்களை உலகம் பாராட்டும்.