“கண்கள் நீர் வற்றிவிட்டன; அழவும் முடியாமல் அவதிப்படுகின்றன.”
“உறக்கம் இன்றி என் கண்கள் துயர் உழக்கின்றன; இரக்கப்பட்டு என்ன பயன்?”
“கண்கள் எனக்குத் துன்பம் விளைவித்தன. அவை இப்பொழுது வேதனைப்படுகின்றன; எனக்குத் துன்பம் செய்த கண்கள் வருந்துவதில் எனக்கு மகிழ்ச்சியே.”
“விரும்பி அவரைக் காணச் சென்றன; இன்று உறக்க மின்றி வருந்துகின்றன; வருந்தட்டும்.”
“சொல்வேறு அவர் செயல்வேறு; அப்படி இருந்தும் அவரைப் பார்க்க விழைகின்றன; அமைதி இன்றித் தவிக்கின்றன என் கண்கள்.”
“அவர் வராவிட்டாலும் தூங்குவது இல்லை; அவர் வந்துவிட்டாலும் உறங்குவது இல்லை; என் செய்வது?”
“கண்கள் துன்பத்தை வெளிப்படுத்தி என்னை ஊரவர்க்குக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. அவற்றை நான் திருத்தவா முடியும்?”
தலைவி கூற்று
“தவறு என்னுடையதுதான்; நான்தான் என்னை விட்டுப் பிரிந்து போக அவரை அன்று அனுமதித்தேன்."