பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
33

யும் பொறாமை இன்மையும் ஒருவனை உயர்த்தும்; அவன் செல்வமும் நல்ல நிலையும் பெற்று உயர்வது உறுதி. அழுக்காறு உடையவன் வழுக்கி விழுவது உறுதி.

18. வெஃகாமை

பிறரை வஞ்சித்துப் பொருள் ஈட்ட நினைத்தால் அவன் குடி கெடும்; குற்றங்கள் சேரும்.

நேர்மை தவறாதவர்கள் மிக்க பயனைக் கருதிப் பழி தரும் செயல்களைச் செய்யமாட்டார்கள்.

அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு அறன் அல்லாதவற்றைச் செய்யமாட்டார்கள். நிலைத்த இன்பம் இவை பயக்கா.

தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டு வாழ்பவர் தம் வறுமையைப் போக்கப் பெருமை கெடும் செயல்களில் ஈடுபட மாட்டார்; பிறர் பொருளை விரும்ப மாட்டார்கள்.

நூல் பல கற்றவரும் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் பிறரிடம் கைநீட்டிப் பொருள் கேட்டுத் தம் கண்ணியத்தைக் குறைத்துக்கொள்கின்றனர். இவர்கள் தம்மைக் கற்றவர் என்று கூறிக்கொள்ள என்ன அருகதை இருக்கிறது?

அருளறத்தில் நம்பிக்கை வைத்து வாழ்பவன் பொருள் வேட்கையில் நம்பிக்கை வைத்துப் பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது தகாது; அஃது அறமாகாது.