பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலேசியா, உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாடு - 2005

திருக்குறள் போட்டியில் முதல் பரிசு பெற்றக் கட்டுரை

மலேசியா நாட்டிலுள்ள கோலாலம்பூர் நகரில், 2005-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 17,18,19-ஆம் நாட்களில், உலகத் தமிழ் மறை ஆராய்ச்சி மாநாடு நடத்தியக் கட்டுரைப் போட்டியில், “திருக்குறள் சொற்பொருள் சுரபி' என்ற இந்த நூலின் ஆசிரியரான புலவர் என்.வி. கலைமணி எம்.ஏ. அவர்கள் எழுதிய 'உலக பார்வையில் தமிழ்மறை என்ற கட்டுரை முதற்பரிசு பெற்றது. அந்தக் கட்டுரை. அந்த மாநாடு வெளியிட்டுள்ள மலரில் 'எனது பார்வையில் தமிழ் மறை” என்ற தலைப்பில், எனது பெயாரல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரை இது :

"எழுத்தின் வடிவத்தையும், எழுத்தின் ஒலி வடிவத்தையும் தமிழ்ச் சான்றோர் உருவாக்கியபோது, எண்ணற்ற மேதைகள் அதற்காக உழைத்தார்கள்.

ஞாலம், ஞானத் திரட்சிக்காக கையேந்தி நிற்கும் காலத்தில் கோலத் தமிழ் எழுத்து ஓவியக் கூட்டங்களை, அவர்கள் உருவாக்கினார்கள்.

ஓங்காரத் தமிழ் மொழியின் பயனை ஒர்ந்து, ஆங்கார ஆதவனின் எரி நெருப்பை அலட்சியப்படுத்தி, பாங்கான தங்களின் பண்புகளுக்கு வாழ்த்துக் கூறியவர்கள் - அந்தத் தமிழ் அறிஞர்கள்.

தீங்கு உளம் நடுங்கும் தீந்தமிழ் மனமுடைய அவர்கள், பரன்பரை பரம்பரையாகத் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை - ஒவியமாய்காவியமாய், வாழ்க்கைத் தத்துவமாய் இயற்றி மறைந்தார்கள்.

அழுதுகொண்டே பிறக்கின்ற மனிதப் பிஞ்சு, சிரித்துக் கொண்டே சாகும்வரை - வாழ்க்கைக்குரிய மனித நெறித் தத்துவங்களை, அகம்-புறம் என்று தமிழிலே வடித்துத் தந்தார்கள்.

காலம்; அவர்களைக் களவாடிச் சென்றாலும், அந்தக் கன்னித் தமிழ் சிந்தனையாளர்கள் தேடித் தந்த சிந்தனைச் செல்வங்கள் - இன்றும் நம்மிடையே நடமாடுகின்றன.

குடல் விழுங்கும் உணவைப்போல, கபாடபுரத்து பைந்தமிழ்க் கருவூலங்களை, தென் மதுரைத் தமிழ்ப் புதையல்களை, கடல் விழுங்கிய போதும், கண்டு கலங்காத அறிவேறுகளாக - அவர்கள் திகழ்ந்தார்கள்.