பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 திருக்குறள் சொற்பொருள் கரபி

ஆண்டுகட்கு முன்பே மறுத்து, தமிழர் பண்பாடுகளை நிலைநாட்டிய மதச் சீர்த்திருத்த ஞானப் புரட்சியாளரான திருவள்ளுவர் பெருமானுக்கு 1972, மே, 3-4-ஆம் நாட்களில் ஒரு மாபெரும் சோதனை ஏற்பட்டது.

தமிழ் மறைச் சிற்பியான திருவள்ளுவருக்கு உலகில் இத்தகைய ஒரு மத ஆய்வுப் போர்க்களம் அவர் வாழ்ந்திருந்த காலம் முதல் அன்று வரை வேற்று மதச் சவாலால் உண்டானதில்லை, உருவானதில்லை. அந்த விவரம் கீழே உள்ளது.

சென்னையில் இன்றும் நடமாடும் நண்பர் புலவர் தெய்வநாயகம் என்பவர், திருவள்ளுவர் கிறித்தவரா?, ஐந்தவித்தான் யார்? வான் எது? நீத்தார் யார், எழு பிறப்பு: சான்றோர் யார்? என்ற ஆறு ஆய்வு நூல்களை எழுதி, திருவள்ளுவர் பெருமானைக் கிறித்துவராக்கிட அரும்பாடுபட்டார்.

இதில் உள்ள கிறித்துவப் பிரிவுகளின் ஒற்றுமை என்ன தெரியுமா? நூல்களை எழுதியவர் CSI கிறித்துவர். அந்த நூல்களைப் புத்தகங்களாக்க உதவியர் - அப்போது சென்னை நகர ரோமன் கத்தோலிக்கர் ஆர்ச் பிஷப்பாக இருந்த அருளப்பா என்பவர், திருவள்ளுவரைக் கிறித்துவராக்க பணம் செலவு செய்தது, சென்னை எல்டாம்சு சாலையில் இயங்கும் கிறித்துவக் கலைத் தொடர்பு நிலையம் இயக்குநர் அருட்திரு சா. சுவிசேஷ முத்து, பி.டி., எம்.டி.எச். அவர்கள். இவர் ப்ராட்டஸ்டண்டு கிறித்தவர்.

திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவுக்கு விடை கண்டிட, இரண்டு நாட்கள் மாநாடு சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள கிறித்துவக் கலையரங்கில் மே மாதம் 3,4 நாட்களில் 1972-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

திராடவிட மொழி நூல் புலமையில் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தவரும், தனித்தமிழ் இயக்கத் தலைவராக விளங்கியவரும், திருக்குறளுக்கு மரபுரை எழுதியவரும், கிறித்துவ மூதறிஞருமான பண்டித ஞா. தேவநேயப் பாவணர். இந்த இரண்டு நாள் மாநாட்டுக்குச் சிறப்புத் தலைவராக அமர்ந்தார்.

இந்த மாநாட்டிற்கு வரவேற்புக் குழு தலைவராக, இந்தக் கட்டுரை ஆசிரியரான புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ., பணியாற்றினார்.

புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டார்கள்.

இரு நாட்கள் மாநாட்டிலும் நடைபெற்றத் திருக்குறள் அறுவை சிகிச்சையால் விளைந்த அனுப்வத்தைக் கேட்டிட, அறிஞர்களது ஆய்வுகளின் ஆழமறிந்திட, ஆயிரக்கணக்கான அறிஞர் பெருமக்கள் வருகை தந்தார்கள். காரணம், இதற்கான விளம்பரங்கள் தினமணி', 'முரசொலி நாளேடுகளில் வந்ததால்தான்.