பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 திருக்குறள் சொற்பொருள் சுரபி

இறுதியாக மாநாட்டின் இரண்டு நாட்களிலும் திருக்குறளார் வி. முனுசாமி, பி.ஏ., பி.எல். சிறப்புரை ஆற்றினார்.

இரண்டு நாள் திருக்குறள் ஆய்வு மாநாட்டிற்கும் தலைமை வகித்த தலைவர் தேவநேயப் பாவாணர், அவர் ஒரு கிறித்துவராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு நியாயமான, நேர்மையான, கடமையான நீதியை, தீர்ப்பை வழங்கினார். என்ன அந்தத் தீர்ப்பு?

திருவள்ளுவர், செயிண்ட் தாமஸ் என்ற பாதிரியார் மத உரையை சென்னை மாநகரிலே கேட்டுத் திருக்குறள் நெறிகளை எழுதியவரல்லர். அவரது வணிக நண்பரான ஏலேலசிங்கர் மூலமாகவும், கிறித்துவக் கருத்துக்களை அறிந்து திருக்குறளை எழுதியவரல்லர்.

நவநீத கிருஷ்ணன்தான் இயேசுநாதர் என்று சிலர் கூறுவதைப் போல இருக்கின்றது. மேற்கண்ட ஆராய்ச்சிகள். நான் எழுதிய திருக்குறள் மரபுரை யில் திருவள்ளுவரது காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று கூறியுள்ளேன். உலகத்தை உய்விக்க வந்த தீர்க்க தரிசிகளது வாக்குகள், நெறிமுறைகள், ஒவ்வொரு நாட்டு ஞானியர்கள் இடையே தோன்றுவதும், கூறுவதும் அந்தந்தக் காலக் கட்டத்துச் சிந்தனையில் மலர்வதுமுண்டு. அதனால், அவரிடமிருந்து இவர் சிந்தனைகளைப் பெற்றார் என்றோ, இவரிடமிருந்து அவர் பெற்றார் என்றோ நினைப்பது இயல்பு. அதற்காக, அந்த ஞானியர்களுக்குக் களங்கம் கற்பிக்க மாட்டார்கள் தேர்ந்த சிந்தனையாளர்கள்.

எனவே, திருவள்ளுவர் காலத்திற்கும் - இயேசு நாதர் காலத்திற்கும் உள்ள இடைவெளியில் நடைபெற்ற மதக்கோட்பாட்டு நெறிகளது வளர்ச்சிகளை நினைத்துக் கொண்டு திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவை எழுப்புவதில் எனக்கு உடன்பாடன்று என்று தேவநேயப் பாவாணர் தனது முடிவுரைத் தீர்ப்பைக் கூறி முடித்தார்.

இந்த மாநாட்டின் வரவேற்பாளராக இருந்த புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ., அவர்கள், மாநாட்டுக்கு வருகை தந்திருந்த புலவரேறு களை எல்லாம் வரவேற்றுத் தனது வரவேற்புரையில் பேசும்போது :

'திருக்குறளை யாத்த திருவள்ளுவர் பெருமானுக்கு ஈராயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுக் காலத்தில், இத்தகைய ஒரு வேற்று மதச் சவால், இன்று வரை ஏற்பட்டதில்லை.

வாழ்க்கையில் ஏற்படும் சலனங்கள் அத்தனைக்கும் எப்படி வளைத்துப் பொருள் காண்பது என்பதற்குரிய ஓர் அகராதி திருக்குறள்:

குறள் பிறந்த நாள் முதல் இன்று வரை, அதன் உள்ளே சென்றவன், தன் கருத்து, தன் தெய்வம், தன் மதம் இருக்கின்றாதா என்று பார்க்கிறானே தவிர, அதன் உண்மையை உணர்ந்து பார்த்தது இல்லை.

எந்த உரையாசிரியருடைய நூலை எடுத்துப் பார்த்தாலும், அதில் அவரவர் விருப்பு, வெறுப்பு, தன்னலம், தன் மதம் தாண்டவமாடுகின்றதே